Friday 24 August 2012

பரம்பொருள்


எல்லா உயிர்களிலும் ஊடுருவி இருப்பவன் ஆண்டவன்.  அவன் பரம்பொருள்.  அவனுடைய விளையாட்டுக்காக திருவிளையாடலுக்காக படைக்கப்பட்டதே அனைத்து சீவராசிகளும்.  அழியாத புகழுக்கும் செல்வத்துக்கும் சொந்தக்காரன் அவன்.  எங்கும் வியாபித்து இருப்பவன்.  எல்லா உயிரினங்களிலும் ஊடுருவி இருப்பவன் அவனே. 
அப்படிப்பட்ட பரம்பொருளுக்கு வணக்கம்

உலகு எல்லாம் தானேயாகி உயிர்தொறும் உறையும் எம்மான்
அலகிலாச் செல்வன்
தொண்டருக்கு அருள் நலம் ஈந்து காப்போன்
அவனுடைய புகழை நாம் மனம் உருகி பாடுவோமானால்
அவன் அருள் உறுதியாக நமக்கு உண்டு,

சகல கல்யாண குண பரிபூரணனே போற்றி போற்றி

No comments:

Post a Comment